Thursday, September 30, 2010

பொய் சொன்னால் இதுதான் தண்டனையா...? ? ?

இது emailல் வந்தது...

ஒரு கிராமத்துப் பக்கமாக ஒரு வேன் நிறைய அரசியல்வாதிகள் போய்க்கொண்டிருந்தார்கள்.
திடீரென்று வேன் ஒரு பள்ளத்தில் கவிழ்ந்து அதில் பயணம் செய்த அனைவரும்
அடிபட்டார்கள்.

அப்போது அங்கே தோட்டவேலை செய்துகொண்டிருந்த ஒரு கிழவன் வந்தான். வந்தவர்கள்
அனைவரும் இறந்துவிட்டார்கள் என்று முடிவு செய்து ஒரு பெரிய குழியாகத் தோண்டி
அனைவரையும் புதைத்துவிட்டான்.

ஒரு வாரம் கழித்து ஒரு போலீஸ் அதிகாரி அங்கே வந்தார்.

அங்கே கவிழ்ந்து கிடந்த வாகனத்தைப் பார்த்தார். இதில் வந்தவர்கள் எல்லாம் எங்கே
என்று அந்தக் கிழவனிடம் கேட்டார்.

அனைவருமே இறந்துவிட்டதால் அவன் புதைத்து விட்டதாகக் கூறினான். அனைவருமே இறந்து
விட்டார்கள் என்று உனக்குத் தெரியுமா? என்று கேட்டார்...".ம்...ம்... ஒண்றிரண்டு
பேர்கள் தாங்கள் சாகவில்லை என்று கூறினார்கள்.

ஆனால் அரசியல்வாதிகள் எப்போதும் உண்மை பேசமாட்டார்கள் என்று
கேள்விப்பட்டிருக்கிறேன்" என்று கிழவன் பதில் கூறினான்.

No comments:

Post a Comment